அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் 71-வது அவதார பெருமங்கள விழாவை முன்னிட்டு கலச விளக்கு வேள்வியுடன் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.மணி தலைமை தாங்கினார். கலச விளக்கு வேள்வி பூஜையை ஆர்க்காடு முன்னாள் எம்எல்ஏ த.பழனி, மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகி கே.ஆர்.சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அன்னதானப் பணியை சுரேஷ்சீனிவாசனும், சமுதாயப் பணியை சிவகாமி ஜெயகாந்தனும், ஆடை தானத்தை பனப்பாக்கம் அகத்தியர் அறக்கட்டளை நிர்வாகி எஸ்.வி.சந்திரனும், தொழிற்கருவி தானத்தை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கச் செயலர் ஜி.பாலசுப்பிரமணியமும் தொடங்கி வைத்தனர்.
கலசவிளக்கு வேள்வியை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி வேள்விக்குழு தலைவர் எஸ்.ரமேஷ், அரக்கோணம் வட்ட வேள்விக்குழு தலைவர் எஸ்.எம்.வேணுகோபால் ஆகியோர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அரக்கோணம் வட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.வரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விழாவுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.மணி தலைமை தாங்கினார். கலச விளக்கு வேள்வி பூஜையை ஆர்க்காடு முன்னாள் எம்எல்ஏ த.பழனி, மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகி கே.ஆர்.சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அன்னதானப் பணியை சுரேஷ்சீனிவாசனும், சமுதாயப் பணியை சிவகாமி ஜெயகாந்தனும், ஆடை தானத்தை பனப்பாக்கம் அகத்தியர் அறக்கட்டளை நிர்வாகி எஸ்.வி.சந்திரனும், தொழிற்கருவி தானத்தை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கச் செயலர் ஜி.பாலசுப்பிரமணியமும் தொடங்கி வைத்தனர்.
கலசவிளக்கு வேள்வியை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி வேள்விக்குழு தலைவர் எஸ்.ரமேஷ், அரக்கோணம் வட்ட வேள்விக்குழு தலைவர் எஸ்.எம்.வேணுகோபால் ஆகியோர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அரக்கோணம் வட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.வரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.