செவ்வாய், 8 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல்

உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டம் தொடங்கினால் உலகத்தில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்டம்தான்.அதுபோல் வருகின்ற ஏப்ரல் மாததில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கான கொண்ட்டாட்டமும் ஆரம்பித்துவிட்டது. எனி இப்போது இருக்கிற கட்சியிலிருந்து என்னொரு கட்சிக்கு தவுவதும், சொந்தமாக புதுக்கட்சி தொடங்குவதும்,வாயில் நுழைவதையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி இறைப்பதும், எங்கேனும் தொகுதியில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தபின் யாரேனும் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னால் வாக்குப் போட்ட மக்களை மறந்து கொள்கையை மறந்து தான் சார்ந்திருந்த கட்சிக்கு துரோகம் இளைத்துவிட்டு தாம் மட்டும் கொள்ளை லாபத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இது புதிய விடயமுமல்ல. வாக்குப்போடும் அந்த மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். அதைத் தெரிந்துகொண்டு அந்த மக்களால் என்னதான் செய்யமுடியும். இதுவரை பதவிக்கு வந்த அனைவரும் இதைத்தான் செய்தார்கள். இனிவரப் போகிறவர்களும் இதைத்தான் செய்யப்போகிறார்கள் . மக்களைப் பொறுத்தவரையில் ராமன் அண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன. அவர்களுக்கு அதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை
"முன்னம் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் நடத்தினார்கள் இப்போது அரசியல்வாதிகள் வியாபாரம் செய்கிறார்கள்"என்று அண்மையில் ஒரு கவிதையில் படித்த ஞாபகம்.
                                                                                                                   பிரபா
ஓம் சக்தி க்கான படங்கள்