திங்கள், 21 மார்ச், 2011

கண்டு பிடித்தவர் யார்?


1.இன்சுலின், கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
பாண்டிங்


2.நியூட்ரான், கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.


3.சமூகவியல் என்ற சொல்லைக் கண்டு பிடித்தவர் யார்?
காம்டே.


4.உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
சுமேரியர்கள்.


5.ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
யேர்மனியர்.


6.கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
எகிப்தியர்கள்.


7.கிரிக்கேட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
ஆங்கிலேயர்.


8.பூச்சியத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
இந்தியர்.


9.காகிதத்தை கண்டு பிடித்தவர் யார்?
சீனர்கள்


10.மார்க்கோனிக்கு முன்பே ரேடியோ அலைகள் பற்றி ஆய்வு செய்த
இந்திய விஞ்ஞானி யார்?
ஜகதீச சந்திரபோஸ்

புதன், 16 மார்ச், 2011

இலங்கையை தாக்கிய ஜப்பானியத் துருப்புக்கள்



உலக யுத்தம் இரண்டு உலகையே உலுக்கிப் போட்ட ஒரு யுத்தம். சுமார் 60 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்த யுத்தம் அது. அறுபது மில்லியன் எனப்படும் கணக்கு மிகப் பெரியது. அதாவது உலகத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை. அல்லது இலங்கை மக்கள் தொகையின் மூன்று மடங்கு ஆகும். உலக யுத்ததில் இலங்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்க்க முன்னர், உலக யுத்தம் II இல் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
மேற்கில் நாடு பிடிக்கும் ஆர்வத்துடனும் முதலாம் உலக யுத்தத்தால் ஏற்பட்ட அவமானம், கடனைத் துடைக்கவும் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப் படைத்தது. சாடிக்கேற்ற மூடி போல முசோலினி தலைமையில் இத்தாலியும் தன்பாட்டிற்கு சேர்ந்து ஆடியது. போலந்தில் தொடங்கி பிரான்சு வரை பல நாடுகளைப் பிடித்து ஹிட்லர் சாதனை படைத்தான். யாராலும் அசைக்க முடியாது என்று நினைத்திருந்த பிரான்சைக் கூட தனது இராணுவ தந்திரத்தால் ஹிட்லர் வீழ்த்தினான். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிய பிரஞ்சு அதிபர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாராம். அப்போது ஆறுதலுக்கு பிரித்தானியா மட்டுமே இருந்தது. அமெரிக்கா இறுதிக் காலம் வரை ஏதோ தனது யுத்தம் இல்லை என்று ஓரமாக இருந்தது.
கொடியை உயர்த்தும் இரசியப் போர்வீரன்
ஓங்கியிருந்த ஹிட்லரின் கை சோவியத் படையெடுப்பில் தான் நோகத் தொடங்கியது. இரும்புத் திரையால் மூடப்பட்டிருந்த சோவியத் ருசியாவின் மீது ஹிட்லரின் பார்வை திரும்பியது. ஆனானப் பட்ட பிரஞ்சு நாடே என் காலடியில் இந்த பாட்டாளிக் கூட்டம் நிறைந்த ருசியா எமது பலம் பொருந்திய படையை என்ன செய்ய முடியும் என்று மமதையோடு ஹிட்லரின் நாசிப் படை முன்னேறியது.
ஆரம்பத்தில் வீரியமாக முன்னேறினாலும் சோவியத் படைகள் தமது உக்கிரமான மறு தாக்குதலைத் தொடங்கினார்கள். அத்துடன் தான் பின்னோக்கி நகரும் போது உணவுக் களஞ்சியங்கள், பண்ணை நிலங்கள், கால் நடைகள், உட்கட்டுமானங்கள் என்பவற்றை தாமே அழித்துக்கொண்டு பின் நகர்ந்தார்கள். இந்த நடவடிக்கையை ஒப்பரேசன் பாபரோசா என்று இன்றும் சிலாகித்து ருசியர்கள் பேசிக்கொள்வார்கள்.
முன்னேறிய நாசிப்படையின் நிலை பரிதாபமானது. உணவுத் தட்டுப்பாடு மட்டுமே என்றால் பரவாயில்லை கடுமையான குளிர்க்காலமும் இரசியாவில் ஆரம்பமானது. -50 டிகிரி வரை குளிர் இருக்கும் என்றால் பாருங்களேன். உணவு, குளிர் மட்டும் பிரைச்சனை என்றால் இல்லை. இரசியப் படை கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தத் தொடங்கியது.
நொந்து நூடில்சாகி பின்வாங்கலாம் என்று நினைத்தால் அதற்கு ஹிட்லரின் அனுமதியில்லை. செய் அல்லது செத்து மடி என்று கட்டளையிட்டுவிட்டார். ஜேர்மானியப் படைகளின் நிலைமையோ கவலைக்கிடம்.
வெடித்துச் சிதறும் அமெரிக்க கடற்படைக் கப்பல்
இதேவேளையில் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டியென்று ஜப்பான் பேர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தித் தொலைத்தது. டிசம்பர் 7, 1941 காலை ஐப்பானிய கடற்படை விமானங்கள் பேர்ல் துறைமுகத்தின் மேலாகப் பறந்து அதிரடித் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இரண்டு அலையாக வந்த 353 ஐப்பானிய விமானங்கள் துறைமுகத்தை நொருக்கியது. இதில் 188 அமெரிக்க விமானங்கள் நொருக்கப்பட்டதுடன் சுமார் இரண்டாயிரம் அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அமெரிக்கரை உலக யுத்தத்தில் பங்குபெறுமாறு வலியுறுத்தும் தன்மையைப் பலப்படுத்தியது. போர் கூடாது என்று முழங்கிய சராசரி அமெரிக்கனும் பழிக்குப் பழி என்று போர் கொடி தூக்கினான். டிசம்பர் 8, 1941 இல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஐப்பானுக்கு எதிரான போர்பிரகடனத்தைச் செய்தார். அதைவிட இந்த நிகழ்வின் மூலம் அமெரிக்கா உலக யுத்தம் இரண்டில் உத்தியோக பூர்வமாக நுழைந்துகொண்டது. இது வரை ஆயுதங்களை விற்பனை செய்து எரியும் வீட்டில் பிடுங்கும் வேலை செய்த அமெரிக்கா இப்போது தன் வீட்டிலும் நெருப்பு பற்றிக் கொண்டதை உணர்ந்துகொண்டது.
அமெரிக்காவின் நுழைவு பிரித்தானியாவின் தலைமையினால நேச அணிகளிற்கு பலம் சேர்த்தது. ஏற்கனவே சரமாரியாக சோவியத் இராணுவத்திடம் வாங்கிக்கட்டிய ஜேர்மன் தலைமயிலான அச்சு அணிக்கு சறுக்கலாக அமைந்தது.  உலகின் மாபெரும் சக்தியாக இருந்த பிரஞ்சு பிரித்தானிய இராச்சியங்கள் தம் சோபை இழந்தது இந்த உலக யுத்தத்தினால்தான் அதைவிட அமெரிக்கா மற்றும் சோவியத் ருசியா மாபெரும் சக்திகளாக எழுச்சி கொண்டதும் இந்த உலக யுத்தத்தினால்தான்.
இரண்டாம் உலக யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக மேலே பார்த்துவிட்டோம். இனி இலங்கையில் இதன் தாக்கம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். அளவிலே இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை குறுனி எனபதனால் என்னவோ இலங்கையின் பங்களிப்பு அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. எனது மாமனார் இலங்கையின் போர் வீரர்கள் உலக யுத்தத்தில் சாப்பாட்டு பொதி பொறுக்கும் வேலையையே செய்தார்கள் என்று சொல்லிச் சிரிப்பது இன்றும் எனக்கு ஞாபகமாக உள்ளது.
இலங்கையில் உலக யுத்தத்தின் தாக்கம் ஐப்பானியரின் கொழும்பு, திருகோணமலை குண்டு வீச்சின் பின்னர்தான் உணரப்பட்டது. இவ்வாறு குண்டுவீசக் காரணம் பிருத்தானிய கடற்படையின் கிழக்குத் தலைமையகம் இலங்கையில் அமைத்தமையே. சிங்ப்பூர் ஐப்பானியர் வசம் வீழ்துவிடவே பிரித்தானியர் இலங்கையின் கொழும்பையும் பின்னர் திருகோணமலையையும் தங்கள் கடற்படைத் தலமையகமாக மாற்றியமைத்தனர். யாராலும் இலகுவில் தகர்த்த முடியாது என நம்பப்பட்ட பிரின்ஸ் ஓப் வேல்ஸ் மற்றும் ரிபல்ஸ் ஐப்பானியர்களால் தகர்ந்து நீரில் மூழ்க வைக்கப்பட்டது. மலாயாவில் நடந்த இந்தச் சண்டையில் ஜப்பானியர்கள் கை ஓங்க அவர்கள் வசம் இருந்த விமானத் தாங்கிக் கப்பலே காரணம். இந்த தாக்குதலின் பின்னரே பிரித்தானியா வெறும் பலமான கடற்படை மட்டும் இருந்து பிரயோசனம் இல்லை விமானம் தாங்கிக் கப்பல்கள் மிக அவசியம் என்று உணர்ந்து கொண்டது. சிங்கர்பூர் வீழ்ச்சியின் பின்னர் அவசரம் அவசரமாக இலங்கையில் பல விமான ஒடுதளங்கள் அமைக்கப்பட்டன. அதைவிட இரத்மலானை, கொக்கலை போன்ற இடங்களில் விமானப் படைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் முன்னரே அமைக்கப்பட்டிருந்த திருமலை, சீனன்குடா விமானப்படைத்தளமும் பலப்படுத்தப்பட்டது.
திருமலை கொழும்பு குண்டுவீச்சு நிகழ்வுகளைப் பார்க்க முன்னர் இந்த நிகழ்வின் தாக்கத்தையே மாற்றியமைத்த ஒருவரைப் பற்றி சில வரிகள் எழுதவேண்டும்.
லியனார்ட் பிர்சால் (Leonard Birchall) ஒரு கனேடிய விமான ஓட்டி. சிறுவயதில் இருந்தே இவரிற்கு பறக்கும் ஆசை. ஒந்தாரியோ மானிலத்தில் பிறந்த இவர் 1933 இல் ரோயல் கனேடிய இராணுவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். 1937 இல் தனது பயிற்சியை முடித்து கனேடிய றோயல் விமானப் படையில் விமான ஓட்டியாக இணைந்து கொண்டார்.
கண்காணிப்பு பணிக்குச் செல்ல முன்னர் லியனார்ட்
ஷெட்லான்ட் தீவுகளில் தனது பணியை ஏற்றுக் கொண்ட லியோனாட் பின்னர் ஐப்பானியர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியதும் இலங்கைக்கு மாற்றப்பட்டார். இலங்கையில் பறந்து கண்காணிப்புச் செய்யும் பணியில் இவர் ஈடுபட்டார். விரைவில் இலங்கையில் தான் பெரும் தீரச் செயலை நிகழ்த்தப் போகின்றோம் என்று அவரிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
4 ஏப்ரல் 1942 அன்று லியனார்ட் கொக்கலை பிரதேசத்தில் இருந்து பறக்கும் படகு (அதுதான் நீரில் தரையிறங்கும் விமானம்) கட்டலீனாவில் ஏறிப் பறக்கத் தொடங்கினார். சுமார் வானத்தில் எட்டு மணி நேரங்கள் சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார் லியனாட். அப்படியே இலங்கையின் தென் கடலைச் சுற்றிப் பறந்து பின்னர் தரை நோக்கித் திரும்ப விழையும் நேரத்தில் தொடுவானத்தில் விரிந்த காட்சி இவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பெரிய ஐப்பானியக் கடற்படைத் தொகுதி ஒன்று இலங்கை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. இதில் ஐந்து விமானந் தாங்கிக் கப்பல்களும் இருந்தது. பர பரப்பான லியனாட் தனது விமானத்தில் இருந்த சக வீரர்கள் மூலம் தரைக்கு தகவலை விரைந்து தெரிவித்தார்.
இவர்களின் விமானத்தைக் கண்ட ஐப்பானிய கப்பல் தமது கப்பலில் இருந்து தாக்குதல் விமானத்தை ஏவி லியனார்ட்டின் விமானத்தை நோக்கிச் சுடத்தொடங்கியது. வெறும் கண்காணிப்பு விமானம் என்பதனால் திருப்பிச் சண்டை கூடப் போட முடியாமல் சூடு பட்டு கடலில் வீழ்ந்தது லியனார்ட் பயனித்த கட்டலீனா இரக விமானம்.
லியனார்ட் அறிவித்தல் கரையை தக்க நேரத்தில் வந்து அடைந்தது. தகவல் கிடைத்ததும் பதில் தாக்குதலுக்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டதுடன் துறைமுகப் பகுதியில் இருந்து சரக்குகள் அவசரமாக அகறப்பட்டது. ஆனாலும் மறுநாள் ஏப்ரல் 5 அன்று ஐப்பானியர்கள் தமது விமானங்கள் மூலம் கொழும்பு துறைமுகத்தை தாக்கினார்கள். பல பிரித்தானியக் கப்பல்களை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று எண்ணி வந்த ஐப்பானியர்களுக்கு ஒரே ஏமாற்றம். நின்றதோ வெறும் மூன்று கப்பல்கள்தான். ஏனைய கப்பல்கள் ஏற்கனவே மாலைதீவில் நின்றிருந்தன. அவை தமது றேடியோ சமிக்சைகளைப் பாவிக்காததால் அவற்றின் உண்மையான இடம் ஐப்பானியக் கப்பல்களால் அறியமுடிவில்லை.
பேர்ல் ஹாபர் தாக்குதலிற்கு சமனான ஒரு தாக்குதலை நடத்த ஜப்பான் நினைத்திருந்தாலும் தாக்குதல் நடத்துமளவிற்குப் பெரியளவில் எதுவும் துறைமுகத்தில் இருக்கவில்லை. இந்த தாக்குதலை சிறப்பாக நடத்த பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடத்திய பல விமானிகள் அழைத்து வரப்பட்டனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். மேலும் பேர்ல் துறைமுகத் தாக்குதலை தலமை ஏற்ற தளபதி மிட்சோ புசிடாவே இந்தத் தாக்குதலையும் நடத்தினார். தொடர்ந்து இலங்கையில் ஒரு தரையிறக்கத்தை ஜப்பானியர்கள் நடத்த நினைத்திருந்தாலும் பிரித்தானிய மற்றும் டச்சு கடற்கலங்கள் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தின.
சுட்ட வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் பாகம்
காலை 7.30 க்கு ஜப்பானிய விமானங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஜப்பானிய சீரோ ரக விமானங்களை றோயல் விமானப்படையின் குரிகேன் இரக விமானங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடத்தின. தாக்குதல் காரணமாக சுமார் 424 பிரித்தானியப் படைகள் இறந்ததுடன் 1120 பேர் கடலில் பலநேரம் தத்தளித்தனர். இதைவிட மேலும் 27 விமானங்களையும் ஜப்பானியர்கள் அழித்தனர். கொலன்னாவையில் உள்ள எண்ணைக் குதம் என எண்ணி அங்கோடையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரின் புணர்வாழ்வு மையத்தையும் ஜப்பானிய விமானங்கள் தாக்கின.
மறுநாள் இலங்கையின் டெய்லி மிரர் செய்தித்தாள் 75 விமானங்கள் கொழும்பு நகரைத் தாங்கியதாகவும் அதில் 25 விமானங்கள் சுட்டவீழ்த்தப்பட்டதாகவும் செய்திவெளியிட்டது.
ஐந்தாம் திகதி கொழும்பில் தாக்குதல் நடத்திய ஜப்பானியர்கள் சும்மா இருக்காது இப்போது இலங்கையில் கிழக்குப் பகுதியைக் குறிவைத்தார்கள். அங்கேதான் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது. திருகோணமலையில் முன்பே கூறியபடி பிரித்தானியாவின் கிழக்கு கட்டளை மையம் இயங்கியது. 9 ஏபரல் 1942 இல் திருகோணமலையைத் தாக்கத் தொடங்கியது ஜப்பானிய விமானப்படை. இந்த சமரில் சுமார் எட்டு ஹூரிகேன் இரக விமானங்களை றோயல் விமானப்படை இழந்தது. ஜப்பான் தனது 5 குண்டுவீசும் விமானகங்ளையும் 6 யுத்த விமானங்களையும் இழந்தது.
ஜப்பானியப் பிரசன்னம் பற்றி முதலே தகவல் கிடைத்த காரணத்தால் திருத்த வேலையில் அமர்த்தப்பட்டிருந்த எச்.எம்.எஸ்.ஹேர்ம்ஸ் எனும் கப்பல் தப்பியோட முயன்றது. ஆனாலும் அந்தக் கப்பலைக் கண்ட ஜப்பானிய விமானி ஒருவன் தகவல் கொடுக்கவே பாதுகாப்பு எதுவுமற்ற இந்தக் கப்பலைத் தாக்கி ஜப்பானிய விமானங்கள் மூழ்கடித்தன.
இதேவேளை திருமலையின் சீனக் குடாப் பகுதியில் உள்ள எண்ணைக் குதங்களை ஜப்பானியரின் தற்கொலைத் தாக்குதல் விமானம் தாக்கியது. இந்த விமானத்தில் மூன்று ஜப்பானியர்கள் பயனம்செய்தார்கள் என்பதைக் குறிப்பிடவேண்டும். இந்த தீயை அடக்க மொத்தம் ஏழு நாட்கள் ஆனதாம்.
இலங்கையை அன்று ஜப்பானியர்கள் கைப்பற்றியிருந்தால் உலக யுத்தம் மேலும் தீவிரம் அடைந்திருக்கலாம். அப்படியே ஜப்பானியர்கள் இந்தியாவினுள்ளும் புகுந்திருப்பார்கள். இலங்கையை ஜப்பான் கைப்பற்ற முயன்ற தருணத்தை பிருத்தானிய பிரதமர் “உலக யுத்தம் இரண்டில் மிகப் பயங்கரமான தருணம்” என்று குறிப்பிட்டார்.
            
         முன்னர் அரைவாசியில் விட்ட லியனார்ட்டிற்கு பின்னர் என்ன ஆனது என்று பார்ப்போம். லியனார்ட் மற்றும் ஒரு விமானப் பணியாளரை ஐப்பானியர்கள் சிறைப்படித்துக் கொண்டனர். ஐப்பானியர்கள் கையில் மாட்டினால் மரணம் நிச்சயம். கைது செய்யப்பட்ட லியனார்ட் யுத்தம் நிறைவு பெறும் வரை யுத்தக்கைதியாகவே இருந்தார். சுமார் நான்கு ஆண்டுகள் ஐப்பானியச் சிறையில் வாடினார்.
இவரின் வீரச் செயல் இலங்கையுடன் நின்றுவிடவில்லை. ஐப்பானிய போர்க்கைதியாக இருக்கும் போதும் சக போர்க் கைதிகளின் நலனிற்காகச் செயற்பட்டதுடன் ஜெனீவா ஒப்பந்தப்படி போர்க்கைதிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார். இவர் இந்தக் காலத்தில் எழுதிய நாட்குறிப்பு பிற்காலத்தில் நேச நாடுகள் நடத்திய பல போர்க்குற்ற விசாரணைகளில் பயன்பட்டது.
முதல் இரண்டு வருடங்களும் இவருடைய மனைவி டோர்த்தி இவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாமல் வாடினார். ஆயினும் பிற்காலத்தில் அவரது கணவர் உயிருடன் ஐப்பானியர்களால் பிடிக்கப்பட்டு உள்ளார் என்று அறிந்துகொண்டார்.
27 ஆகஸ்ட் 1945இல் அமெரிக்கப்படையினரால் லியனார்ட் மீட்கப்பட்டார். 1967 வரை தொடர்ந்து கனேடிய இராணுவத்தில் பணியாற்றிய லியனார்ட் 1994 இல் இலங்கையில் நடந்த தேர்தலில் சர்வதேசக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். தனது 89 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். இவரின் மகத்தான பணியை மெச்சி பிரித்தானிய பிரதமர் இலங்கையின் இரட்சகன் (The Saviour of Ceylon) என்று பாராட்டினார்.

செவ்வாய், 8 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல்

உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டம் தொடங்கினால் உலகத்தில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்டம்தான்.அதுபோல் வருகின்ற ஏப்ரல் மாததில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கான கொண்ட்டாட்டமும் ஆரம்பித்துவிட்டது. எனி இப்போது இருக்கிற கட்சியிலிருந்து என்னொரு கட்சிக்கு தவுவதும், சொந்தமாக புதுக்கட்சி தொடங்குவதும்,வாயில் நுழைவதையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி இறைப்பதும், எங்கேனும் தொகுதியில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தபின் யாரேனும் உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னால் வாக்குப் போட்ட மக்களை மறந்து கொள்கையை மறந்து தான் சார்ந்திருந்த கட்சிக்கு துரோகம் இளைத்துவிட்டு தாம் மட்டும் கொள்ளை லாபத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இது புதிய விடயமுமல்ல. வாக்குப்போடும் அந்த மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். அதைத் தெரிந்துகொண்டு அந்த மக்களால் என்னதான் செய்யமுடியும். இதுவரை பதவிக்கு வந்த அனைவரும் இதைத்தான் செய்தார்கள். இனிவரப் போகிறவர்களும் இதைத்தான் செய்யப்போகிறார்கள் . மக்களைப் பொறுத்தவரையில் ராமன் அண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன. அவர்களுக்கு அதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை
"முன்னம் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் நடத்தினார்கள் இப்போது அரசியல்வாதிகள் வியாபாரம் செய்கிறார்கள்"என்று அண்மையில் ஒரு கவிதையில் படித்த ஞாபகம்.
                                                                                                                   பிரபா
ஓம் சக்தி க்கான படங்கள்

திங்கள், 7 மார்ச், 2011

அபராதம் ஒரு ரூபாய்


தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான். அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார். "இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்."இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்."அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்."அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

மதம்



  இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு மகான் சாத்தானை வணங்கிக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் அவரிடம் வந்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனை வணங்காமல் சாத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் இறந்த பின்னர் எங்கே போகப்போகிறேனோ தெரியாது.ஒருவேளை நான் சாத்தானிடம் செல்ல நேர்ந்தால் அவனை நான் வணங்கினேன் என்பதற்காகவேனும் என்னை அவன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவான்.
  ஒருவேளை நீங்கள் கடவுளிடம் செல்ல நேர்ந்துவிட்டால் என்று உறவினர் கேட்டதற்கு,
  நாம் கடவுளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் அன்பானவர் நாம் அவர் மீது வெறுப்பைக் காட்டினாலும் எப்போதும் அவர் நம்மீது அன்பாகவே இருப்பார் என்றார் அந்த மகான்.

உண்மையில் மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் விளக்கங்களை கேட்கும்போதுகடவுள்மீது பக்தி ஏற்படுவதைவிட அதிகமாக பயம்தான் ஏற்படுகிறது. எந்த மதத்தவராய் இருந்தாலும் எங்கள் மதம்தான் உண்மையான கடவுளின் மதம்; மற்றவர்கள் சாத்தானின் வலையில் சிக்கியிருக்கிறார்கள்; நீங்கள் சாத்தனிடம் இருந்து விடுபட்டு விரைவில் எங்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்; இறைவன் ஆட்சியில் புதிய பரதீஸ் உருவாகப் போகிறது அங்கே நமது கடவுளின் விசுவாசிகளாய் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வார்கள்; மற்றவர்கள் சாத்தானோடு கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றெல்லாம் மதநூல்களில் போதிக்கப் பட்டிருப்பதையும்கூட சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்டால் நமக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது இல்லையா! மேற்கூறப்பட்ட குட்டிக்கதை இதைப் பற்றித்தான் விளக்குகிறது.

மதம் யானைக்குப் பிடித்தால் காடு அழியும்
அதுவே மனிதனுக்குப் பிடித்தால் நாடு அழியும்,
இதை உணராத வரையில் இந்த பூமியே நரகம்தான்!
                                                                                                   பிரபா

மழலையின் ஆசை



ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.

தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்

“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.

தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”

மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.

தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.

சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.

மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.

அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.

தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.

ஏழை என்றால்



எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.

“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.

நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.

நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.

நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.

நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.

நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.



நலம் தரும் வேம்பு



 வேம்பை ஒரு சதாரண மரமென்று எடைபோடமுடியாது. இது அதிகம் சக்தி வாய்ந்த ஒரு சஞ்சீவிமரம். இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் வேப்பமரம் என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானிகள் இதனை அதிசய மரம் என்று வியந்து கூறுகிறார்கள். வேம்பினை இந்துக்கள் நீண்டகாலமாக பயன்படுத்திவருகின்றனர். வலி, ஜீரம், தொற்றுநோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம்பெற வேம்பையே பயன்ப்டுத்தியுள்ளனர்.வேப்பங்குச்சியால் பல்லை சுத்தம்செய்கிறார்கள் வெப்பிலைச்சாற்றை தோல்நோய்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பசியைத்தூண்ட, பித்ததைக் குறைக்க, உடல் வலிமைபெற போன்ற உடற்கோளாறுகளை போக்க வேப்பிலையை கொதிக்க வைத்து கசாயமாக்கி தேனீரைப்போல் அருந்துகின்றனர்.

1959 ஆண்டு சூடான் நாட்டில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து  வேப்ப மரத்தைத் தவிர மற்ற ஏனைய மரங்களின் இலைகளை முற்றிலும் அழித்தது இதை அவதானித்த யேர்மனிய ஆராய்ச்சியாளர் ஹேயன் ரிச்சும் அவரது மாணவர்களும் இதை உலகிற்கு அறிவித்தார்கள் அதன்பின் விஞ்ஞானிகள் பலரின் கவனம் வேப்பமரத்தின் பக்கம் திரும்பியது ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் வேம்பைப் பற்றி நடாத்திய ஆய்வுகள் அனைத்தும் நம்பிக்கையான முடிவுகளையே தந்திருப்பதாக தெரிவிக்கிறனர்.

வேப்பமரத்தின் பயன்கள்
வேம்பு (mahogany) மஹோகனி என்ற தாவர வகையைச் சார்ந்தது. இது 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது . 2.5 மீட்டர் இதன் அதிகூடிய பருமனாகும். இது வளமற்ற நிலத்தில்கூட வேகமாக வளரும். பராமரிப்பு எதுவும் தேவையில்லை. இந்த மரம் எப்போதும் இலைகளோடே காணப்படுவதால் வருடம் முழுவதும் நிழல் தருகிறது. வேம்பை வீடுகளில் வளர்ப்பதனை இந்துக்கள் ஒரு வழக்கெனக் கொண்டிந்தாலும் அதற்கான விளக்கம் என்னவென்றால், வேம்பைச்சுற்றி ஆநவசந நோய் எதிர்ப்புசக்தி உள்ளதென்றும் காற்றானது தூய்மையடைகிறது என்றும் சொல்லப்படுகிறது. சித்த ஆயுர்வேத மருந்துகளில் வேம்பின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.(ஆயுர்வேததில் இதனை நிம்பா என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்) இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு ஆபிரிக்காவில் நிழல் தருவதற்காகவும், சஹாராப்பாலைவனம் தெற்கு நோக்கிப் பரவுவதை தடுப்பதற்காகவும் வேம்பு அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காடுகளை வளர்ப்பதற்காக மத்தியகிழக்கு நாடுகளிலும், மத்திய தென்னமெரிக்க நாடுகளிலும் வனக்காப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் புச்சிக்கொல்லி மருந்துகள் இரசாயன மருந்துகளில் உள்ள டைல மேட்டைவிட அதிக சக்தி வாய்ந்தது இதனால் மனிதருக்கோ, விலங்குகளுக்கோ, இயற்கைக்கோ எந்தவகையிலும் பதிப்பும ஏற்படாது. வேப்பமர புச்சிகொல்லி மருந்துகளை தெளித்தால் அதன் மணம் உள்ளவரை வெட்டுக்கிளிகளோ அல்லது வேறு பூச்சிகளோ செடிகளை அழிக்காமலிருக்கின்றன. இரசாயன மருந்துகள் தெழிக்கப்பட்ட தாவரங்களை உணவாக உட்கொள்ளும்போது பல பின்விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துகின்றது. ஆனால் வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எந்தப் பின் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மிகக்குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இது கிடைக்கிறது.

அமெரிக்காவில் வாசிங்டன் தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட வேப்பமரம் பற்றிய ஆய்வுகள் பல திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன.வேப்பமரத்திலிருந்து பெறக்கூடிய மருந்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.வேப்பமரம் அதிக எண்ணிக்கையில் வளர்வதனால் சுற்றுப்புற சூழல் பாதுகக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கண்
அமெரிக்காவின் கண் இப்போது வேப்பமரத்தின் மீது விழுந்திருக்கிறது. உலகில் வேப்பமரம் நிறைந்து காணப்படுகிற இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த வேப்பமரங்களின் காப்புரிமையையும் தனதாக்கிக்கொள்ள அமெரிக்கா முயன்று ஒரு தடவை தோற்றுப்போனது. ஆனால் அது இன்னும் வேறு பல வழிகளில் இதற்கான காய் நகர்த்தல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவின் இந்த ஆசை நிறைவேறுமானால் வேப்பங்கனிகூட எழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்.அமெரிக்கா இதில் இவ்வளவு அக்கறை காட்டுவதிலிருந்தே புரிந்துகொள்வோம் வேப்பமரத்தின் மகத்துவத்தை.


                                                                                                                                             பிரபா

அன்பே சிவம்


    தமிழர்களின் வாழ்வியலோடுபின்னிப்பிணைந்திருப்பது சைவசமயமாகும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்என்று அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவையாக இன்றுவரை இருந்துவருகிறது. சைவத்திலிருந்து மாறி வேறு மதங்களை தழுவி வாழுபவர்கள் மத்தியில்கூட இன்றும் சைவப்பழக்கவழக்கங்கள் மறாமல் இருக்கும் அளவிற்கு தமிழும் சைவமும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.சைவம் அன்பைத்தான் முதன்மையாக போதிக்கிறது அன்பே சிவம் என்பது சைவர்களின் மூல மந்திரமாகும்.
இன்று சைவசமயத்தின்மீது அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலேயே சில அதிருப்திகள் எழுந்துள்ளன. சைவசமயத்தை சேர்ந்த இன்னும் பலர் வேறுமதங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்! பல காரணங்களைக் சொல்லலாம்.அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களை இப்போது பார்ப்போம்.

*விளங்காத மொழியில் வழிபாடு செய்தல்.
*பூசை செய்பவர் யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்.

விளங்காத மொழியில்வழிபாடு
அதிகமான தமிழர்கள் சமஸ்கிருதம் தெரியாதவர்கள், ஆனால் சைவ ஆலயங்களில் ஏன் தமிழ் மொழியில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. மந்திரங்கள் ஓசை வடிவில் அமைந்தவை அதனாலேயே சமஸ்கிருததில் வழிபாடு நடைபெறுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழிலும் அவ்வகை மந்திரங்கள் உண்டு என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். எடுத்துக்காட்டு திருமூலர் எழுதிய திருமந்திரம்.

பூசை செய்பவரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்
உலகம் இருபத்தொராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.இன்றும் தமிழர்கள் மத்தியில் சாதிமுறை தொடர்வது பெரும்பாலான தமிழர்களுக்கு வேதனை அழிக்கின்ற ஒரு விடயமாக இருந்துவருகிறது. பூசகரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல் போன்ற சில முறைமைகளை தமிழாலயங்களில் இன்னும் கடைப்பிடிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர்களில் பலர் நம்புகின்றனர். ஏன் இன்னும் இந்த முறை தொடர்கிறது!  இவை நம்மிடம் இடையில் வந்து தொற்றிக்கொண்டவைதான். இன்றும் கதிர்காமம் போன்ற சில ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் (வேட்டுவ இனத்தைச் சேர்ந்தவர்கள்) வருடத்தில் சில தினங்கள் பூசகராக இருந்து வழிபாடு செய்து வருகின்றமை யாவரும் அறிந்தவைதான். இது பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான்.

      சைவசமயத்தின்மீது இளையோருக்கு ஈடுபாடு ஏற்படும் வகையிலும், அதன் மீது மற்ற மதத்தவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளில் சீர்திருதங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளை களைவோம். புரியாத மொழியில் வழிபாடு, பூசை செய்பவர் சாதிமுறையில் தேர்ந்தெடுத்தல் இவை இரண்டும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய முக்கிய விடயங்களாகும். இன்று சில கோயில்களில் கவனத்தில் எடுக்கப் பட்டிருப்பத்தை அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்த மாற்றம் மிக வேகமாக செயற்படுத்தப்பட வேண்டும்

    இன்று உலகில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மதங்களை எடுத்துப் பார்த்தால் காலத்திற்கு ஏற்ப நிகழ்ந்துவரும் மாற்றங்கள்தான்
இந்த வளர்ச்சிக்கு காரணமாகின்றது. சைவசமயத்தை பொறுத்தவரை புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.ஏற்கனவே நமது சமயத்தில் இதுவரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்ற நல்ல விடயஙளை புகுத்துவதே போதுமானது. தமிழர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                                                                              பிரபா


நினனத்ததெல்லாம் நடந்துவிட்டால்


நாம் இங்கு பணத்தைமட்டும் தேடிதேடி
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம்
அம்மா அப்பா,சகோதரங்கள், சொந்தங்கள்
என்று ஒன்றாய் கூடி வாழும்வாழ்க்கை பற்றிய
கனவில் மட்டுமே இருந்துவிட்டோம்
என் தங்கையின் அண்ணன்களின் திருமணத்திற்கு
மின்னஞ்சலில் வாழ்த்துச்செய்தி அனுப்பிவைத்தேன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா அம்மாவையும்
எனது இரண்டாவது அண்ணாவையும் கண்டு வந்தேன்
மூத்த அண்ணாவை நான் கண்டு
இருபத்திரண்டு வருடங்கள் ஓடிவிட்டது
என் தங்கை பக்கத்து நாட்டில் வசித்து வருகிறாள்
எங்கே வாழ்க்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

அப்போதெல்லாம் இங்கு நம்மவர் மிகக் குறைவு
வீதிகளில் ஒரு தமிழனைப் பார்ப்பதே அரிது
பேச்சுத் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்களா
என்று நான் ஏங்கித்திரிந்த பொழுதுகள் அவை
எனது தாய் தந்தை சகோதரங்களின்
நினைவுகள் என்னை அதிகம் பதம்பார்த்தன
ஏமாற்றங்களும், தோல்விகளும்
என்னோடு தொடர்ந்து கொண்டே இருந்தன
வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத
அந்த இளம் வயதில் நெஞ்சினில்
வலிகளை சுமந்து நான் நடந்தேன்
யாரிடமும் நான் என் துயரத்தைச் சொல்லி அழுததில்லை
நான் கோயிலுக்குச் செல்வதில்லை
*ஆனால் நான் கடவுளை அதிகம் நம்புபவன்*
எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பது என் கருத்து
எனக்கு கவலை அதிகமாகும்போது
அவன் என்னை கவனித்துக்கொண்டிருப்பான்
அவன்தான் நான் விரும்பியோ ,விரும்பாமலோ
எனக்கு ஒரு நிம்மதியான வாழ்வைத் தந்திருக்கிறான்
                                                                                          
                                                                                                      பிரபா

ஞாயிறு, 6 மார்ச், 2011

பாரதியின் முழக்கம்


காசியிலே பாரதியார் படித்துக்கொண்டிருந்த காலத்திலே அவருக்கு வயது பதினெட்டு. அவர் கையிலே எப்போதும் ஷெல்லியின் கவிதை நூல் இருக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கங்கையின் கரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார்.
பாரதியாரின் அத்தையும் அவரது கணவரும் பாரதியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். அத்தையின் கணவரான கிருஷ்ணசிவனுக்கு பாரதி கிராப்புத் தலையாக கோட்டும் ஷீவும் போட்டுக்கொண்டு வளைய வருவதில் விருப்பமில்லை. எனவே தம்மோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட பாரதியை அனுமதிக்கமாட்டார்.
கிருஷ்ணசிவன் மார்கழித் திருவாதிரை தினத்தை பெரிய உற்சவமாகவே கொண்டாடுவார். கோவிலில் அபிஷேகம், ஆராதனை எல்லாம் முடிந்தன. காராம்பசு தரிசனம், கனகசபை தரிசனம் என எல்லா தரிசனமும் முடிந்த பிறகு திருவம்பாவை பாடுவார் கோவில் ஓதுவார்.
ஆனால் அன்று ஓதுவாரைக் காணோம். எப்போது அவர் வந்து பாடு பூஜையை முடிப்பது? கிருஷ்ணசிவனும் கூடியிருந்தவர்களும் பரபரத்தனர். ஒருவருக்கும் திருவெம்பாவை தெரியவில்லை.
அத்தை பாரதியை அழைத்து கிராப்புத் தலை தெரியாதிருக்க தலைப்பாகை கட்டி, விபூதியைப் பட்டையாக இட்டு, ருத்திராட்சத்தைக் கழுத்திலே கட்டி திருவெம்பாவைப் பாடச் செய்தாள்.
பாரதியின் அழுத்தம் திருத்தமான திருவெம்பாவை இசை முழக்கமும், பாடிய முறையும் கிருஷ்ணசிவனின் உள்ளத்தை உருக்கிவிட்டது.
"அப்பா! இத்தனை சிறு வயதிலே உனக்கு எவ்வளவு ஞானம்! நாங்கள் வெறும் ஆஷாடபூதிகள். எங்களுக்கு குடுமியும் பூணூலும் வேண்டும். ஆனால் உன்னைப் போன்ற உண்மையான பக்தி உடையவர்களுக்கு எந்த வேஷமும் வேண்டாம்." என்று கூறி பாரதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் சிவன்.

ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா


 அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் 71-வது அவதார பெருமங்கள விழாவை முன்னிட்டு கலச விளக்கு வேள்வியுடன் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.மணி தலைமை தாங்கினார். கலச விளக்கு வேள்வி பூஜையை ஆர்க்காடு முன்னாள் எம்எல்ஏ த.பழனி, மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகி கே.ஆர்.சுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  அன்னதானப் பணியை சுரேஷ்சீனிவாசனும், சமுதாயப் பணியை சிவகாமி ஜெயகாந்தனும், ஆடை தானத்தை பனப்பாக்கம் அகத்தியர் அறக்கட்டளை நிர்வாகி எஸ்.வி.சந்திரனும், தொழிற்கருவி தானத்தை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கச் செயலர் ஜி.பாலசுப்பிரமணியமும் தொடங்கி வைத்தனர்.
  கலசவிளக்கு வேள்வியை வேலூர் கிழக்கு மாவட்ட ஆதிபராசக்தி வேள்விக்குழு தலைவர் எஸ்.ரமேஷ், அரக்கோணம் வட்ட வேள்விக்குழு தலைவர் எஸ்.எம்.வேணுகோபால் ஆகியோர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அரக்கோணம் வட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் ஆர்.வரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சனி, 5 மார்ச், 2011

மருவூர் விழாக்கோலம்

மருவூர் விழாக்கோலம்

மருவூர் அன்னை புகழ் விடியோ படல்கள்

கௌரிக்காப்பு தோத்திரம்


அம்பிகை கௌரிக்காப்பு தோத்திரம்

அம்பிகை கௌரிக்காப்பு தோத்திரம்


தேவி துணை
ஓம் சக்தி

காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்

திருச்சிற்றம்பலம்

இவ்விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
தேவாரம்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
- திருஞானசம்பந்தர்
சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

 துர்க்கை அம்பாள் போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி   4.

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி           8.

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி              12.

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி            16.

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி       20.

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி            24.

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி             28.

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி             32.

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி             36.

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி         40.

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி              44.

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி           48.

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி  52.

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி         56.

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி                60.

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி           64.

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி           68.

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி         72.

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி              76.

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி          80.

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி                   84.

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி        88.

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி   92.

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி                 96.

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி         100.

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி         104.

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி             108. 

மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி        20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி    70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி    90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி    100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.

மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்

ஓம் ஓம்சக்தியே             போற்றி ஓம்
ஓம் ஓங்கார ஆனந்தியே        போற்றி ஓம்
ஓம் உலக நாயகியே            போற்றி ஓம்
ஓம் உறவுக்கும் உறவானவளே    போற்றி ஓம்
ஓம் உள்ளமலர் உவந்தவளே        போற்றி ஓம்
ஓம் ஓதரிய பெரும் பொருளே        போற்றி ஓம்
ஓம் உண்மைப் பரம் பொருளே    போற்றி ஓம்
ஓம் உயிராய் நின்றவளே        போற்றி ஓம்
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் மனமாசைத் துடைப்பாய்        போற்றி ஓம்        10.

ஓம் கவலை தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் ககனவெளி ஆனாய்        போற்றி ஓம்
ஓம் புற்றாகி வந்தவளேஓம்        போற்றி ஓம்
ஓம் பாலாகி வடிந்தவளே        போற்றி ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய்        போற்றி ஓம்
ஓம் பண்ணாக இசைந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாமலர் உவந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாம்புரு ஆனாய்            போற்றி ஓம்
ஓம் சித்துரு அமைந்தாய்        போற்றி ஓம்
ஓம் செம்பொருள் நீயே        போற்றி ஓம்        20.

ஓம் சக்தியே தாயே            போற்றி ஓம்
ஓம் சன்மார்க்க நெறியே        போற்றி ஓம்
ஓம் சமதர்ம  விருந்தே        போற்றி ஓம்
ஓம் ஓங்கார உருவே            போற்றி ஓம்
ஓம் ஒருதவத்துக் குடையாய்        போற்றி ஓம்
ஓம் நீள்பசி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் நின்மதி தருவாய்            போற்றி ஓம்
ஓம் அகிலமே ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் அண்டமே விரிந்தாய்        போற்றி ஓம்
ஓம் ஆன்மீகச் செல்வமே        போற்றி ஓம்        30.

ஓம் அனலாக ஆனாய்            போற்றி ஓம்
ஓம் நீராக நிறைந்தாய்            போற்றி ஓம்
ஓம் நிலனாகத் திணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தூறாக வளர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் துணிபொருள் நீயே        போற்றி ஓம்
ஓம் காராக வருவாய்            போற்றி ஓம்
ஓம் கனியான மனமே            போற்றி ஓம்
ஓம் மூலமே முதலே            போற்றி ஓம்
ஓம் முனைச்சுழி விழியே        போற்றி ஓம்
ஓம் வீணையே இசையே        போற்றி ஓம்        40.

ஓம் விரைமலர் அணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவங் கடந்தாய்        போற்றி ஓம்
ஓம் சகலமறைப் பொருளே        போற்றி ஓம்
ஓம் உத்தமி ஆனாய்            போற்றி ஓம்
ஓம் உயிர்மொழிக் குருவே        போற்றி ஓம்
ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் நீள் நிலத் தெய்வமே        போற்றி ஓம்
ஓம் துரிய நிலையே            போற்றி ஓம்
ஓம் துரிய தீத வைப்பே        போற்றி ஓம்
ஓம் ஆயிர இதழ் உறைவாய்        போற்றி ஓம்        50.

ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய்    போற்றி ஓம்
ஓம் கருவான மூலம்            போற்றி ஓம்
ஓம் உருவான கோலம்        போற்றி ஓம்
ஓம் சாந்தமே உருவாய்        போற்றி ஓம்
ஓம் சரித்திரம் மறைத்தாய்        போற்றி ஓம்
ஓம் சின்முத்திரை தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் சினத்தை வேரறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கையிரண்டு உடையாய்        போற்றி ஓம்
ஓம் கரைபுரண்ட கருணை        போற்றி ஓம்
ஓம் மொட்டுடைக் கரத்தாய்        போற்றி ஓம்        60.

ஓம் மோனநல் தவத்தாய்        போற்றி ஓம்
ஓம் யோகநல் உருவே            போற்றி ஓம்
ஓம் ஒளியன ஆனாய்            போற்றி ஓம்
ஓம் எந்திரத் திருவே            போற்றி ஓம்
ஓம் மந்திரத் தாயே            போற்றி ஓம்
ஓம் பிணி தவிர்த்திடுவாய்        போற்றி ஓம்
ஓம் பிறவிநோய் அறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் மாயவன் தங்கையே        போற்றி ஓம்
ஓம் சேயவன் தாயே            போற்றி ஓம்
ஓம் திரிபுரத்தாளே            போற்றி ஓம்        70.

ஓம் ஒருதவம் தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் வேம்பினை ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் வினையெலாம் தீர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் அஞ்சனம் அருள்வாய்        போற்றி ஓம்
ஓம் ஆருயிர் மருந்தே            போற்றி ஓம்
ஓம் கண்ணொளி காப்பாய்        போற்றி ஓம்
ஓம் கருத்தொளி தருவாய்        போற்றி ஓம்
ஓம் அருளொளி செய்வாய்        போற்றி ஓம்
ஓம் அன்பொளி கொடுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கனவிலே வருவாய்        போற்றி ஓம்        80.

ஓம் கருத்திலே நுழைவாய்        போற்றி ஓம்
ஓம் மக்கலைக் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய்    போற்றி ஓம்   
ஓம் எத்திசையும் ஆனாய்        போற்றி ஓம்
ஓம் இதயமாம் வீணை            போற்றி ஓம்
ஓம் உருக்கமே ஒளியே        போற்றி ஓம்
ஓம் உள்ளுறை விருந்தே        போற்றி ஓம்
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனங்கனிந்து அருள்வாய்    போற்றி ஓம்
ஓம் நாதமே நலமே            போற்றி ஓம்        90.

ஓம் நளின மலர் அமர்வாய்        போற்றி ஓம்
ஓம் ஒற்றுமை சொல்வாய்        போற்றி ஓம்
ஓம் உயர்நெறி தருவாய்        போற்றி ஓம்   
ஓம் நித்தமும் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் நேரமும் ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் பத்தினி பணிந்தோம்        போற்றி ஓம்
ஓம் பாரமே உனகே            போற்றி ஓம்
ஓம் வித்தையே விளக்கே        போற்றி ஓம்
ஓம் விந்தையே தாயே            போற்றி ஓம்
ஓம் ஏழையர் அன்னை            போற்றி ஓம்        100.

ஓம் ஏங்குவோர் துணையே        போற்றி ஓம்
ஓம் காலனைப் பகைத்தாய்        போற்றி ஓம்
ஓம் கண்மணி ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் சத்தியப் பொருளே        போற்றி ஓம்
ஓம் சங்கடந் தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவச் சுரங்கமே        போற்றி ஓம்
ஓம் தாய்மையின் விளக்கமே        போற்றி ஓம்
ஓம் ஆறாதார நிலையே        போற்றி ஓம்        108.

ஓம் சக்தி ஓம்     சக்தி ஓம்    சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்    சக்தி ஓம்    சக்தி ஓம்
        ஓம்    ஓம்    ஓம்

அம்பிகையின் பாடல்கள்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாடல்கள்

                          பாடல்  -  1               

இராகம்:  பாகேசி                தாளம்:  ஆதி
                          பல்லவி
    பணிசெய் பத்தர்கள் போற்றிப் பரவுமிடம்
    பணிப்புல நற்பதியே ஸ்ரீ முத்துமாரியை
                                                 (பணி......)

                          அனுபல்லவி
    பிணிகளைத் தீர்க்கும் பெம்மான் இறைவியை
    மணியொலி நாதத்தில் மங்களத்துதிபாடும்
                                                 (பணி......)
                       
                         சரணம்  1
    வேதங்கள் ஒலித்திட வேண்டும் வரந்தரும்
    நாதசொ ரூபியை நாரணி காளியை
    பாதது திசெது பாடிப்ப ரவிநின்று
    ஓதும்ம றைகளின் உட்பொருளை உணர்த்த
                                                 (பணி......)

                         சரணம்  2
    ஆடிப் பூரத்தில் அன்னையைப் போற்றிசெய்து
    கூடிக் கொலுவிருத்தி குங்குமப் பொட்டுமிட்டு
    ஆடியும் பாடியும் ஆரத்திகள் எடுத்தும்
    நாடிடும் பத்தருக்கு ந்ல்லமுதுந் தரும்
                                                 (பணி......)

                          பாடல்  -  2

    இராகம்:  நடைபைரவி        தாளம்:  ஆதி
                          பல்லவி
    பாணர் பணிந்தேத்த பரமப தம் அருளும்
    பணிப்பு லத்து நாயகியே உமையே -  யாழ்ப்
             
                         அனுபல்லவி
    வானவர் தானவர் வலம்வந்து மலர்சொரிய
    ஞானநடம்புரியும் ஆரணி நீ பூரணி நீ

                         சரணம்  1
    கவினுறு கீதங்கள் களிப்புடன் பாடிட
    புவியிலுள் ளோர்க்கருளும் புராதனி நீ - என்
    நாவில் நடம் புரிந்து நற்றமிழ்ப் பண்பாடும்
    பாவினால் நிதந்துதிக்க வரமருள்வாய்

                        சரணம்  2
    பத்தரும் சித்தரும் முத்தரும் போற்றிநின்று
    நித்தியத் துதிபாடும் உந்தன் அழகை
    எத்திசை சென்றாலும் எண்ணியே நான் பாட
    சித்திகள் யாவும் தந்தே துணையிருப்பாய்

                       சரணம்  3
    சத்திசிவ ரூபமாய் சகலரும் போற்றுகின்ற
    முத்துமாரித் தாயாகி முன்நிற்பவளே  - நல்
    வித்தைகள் நல்கியே சகலவளமும் தந்து
    இத்தரணியில் சிறக்கும் இன்பம் தருவாய்

ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் துதிகள் (தமிழ் விளக்கத்துடன்)



அம்பிகையை உள்ளன்போடு முழுமனதோடு பிரார்த்தனை செய்தால் தீராத பிரச்சினைகளே இல்லை. சௌந்தர்யலஹரி அம்பிகையின் முழு சக்தியையும், பிரதிபலிக்கக் கூடியது. அஷ்டமாசக்தியையும், அறுபத்துநான்கு கலைகளையும், பதினாறு பேறுகளையும், பிறவிப் பெரும் பயனையும் பெறலாம். முக்கியமான சில துதிகள் கீழே உள்ளது. பக்தர்கள் படித்து பயன்பெறலாம்.

1. பேச்சில் திக்கல் இருந்தால் நீங்க, பேச்சுத் திறமை அதிகரிக்க

த்வதீயம் ஸெளந்தர்யம் து ஹின கிரி, கன்யே துலயிதும்
கவீந்த்ரா : கல்பந்தே கதமபி விரிஞ்சி - ப்ரப்ருதய:
யதர்லோ கௌத்ஸுக்யா- தமரலலனா யாந்திமனஸா
தபோபிர் துஷ்ப்ரா பாமபி கிரிச - ஸாயுஜ்ய பத வீம்

(இமவத்புத்திரி! நினைத்தவுடன் கோடி கவிதைகளை மழையாகப் பொழியும் கவிஞர்களும், சரஸ்வதியை நாவில் தரித்திருக்கும் பாக்கியம் பெற்ற நான்முகனும் கூட உன் உழகுக்கு உதாரணம் தேடி கற்பனை செய்து தோல்வியுற்று விட்டார்கள். பரமசிவனின் கண்ணல்லாமல் வேறு கண்கள் உனது முழு அழகையும் கண்டதில்லை, உனது சந்தோஷமான நேரத்தில் என்னை நினைத்து அருள்புரிவாய் அம்மா!)

2. எத்துறையாயினும் புகழை விரும்புபவர்கள் சொல்லவேண்டிய ஸ்லோகம்

வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ - கும்பப்ரக்குதிபி:
ஸமாரப்தாம் முக்தா மணிபி-ரமலாம் ஹாரலதி காம்
குசாபோகோ பிம்பாதர - ருசிபி ரந்த: சபலிதகாம்
ப்ரதாப-வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவதே.

(அம்மா! யானையின் தலையில் தோன்றும் முத்து கர்ப்பூர வர்ணம் உள்ளது. கஜாசுரனை வதைத்த பின் அவன் தலையில் உள்ள முத்துக்களை எடுத்து தேவிக்கு மாலையாகப் பரிசளித்தார், ஈசன். அதில் தேவியின் உதட்டு சிவப்பு பிரதிபலித்து மாலை ஒரு பக்கம் பார்த்தால் சிவப்பாகவும், மறுபக்கம் வெள்ளையாகவும் ஜொலிக்கிறது. சிவப்பு வீரத்திற்கும், வெள்ளை புகழுக்கும் அடையாளம். அந்த இரண்டையும் தேவி நீ எனக்கு அளவில்லாமல் தர வேண்டும்.

3. பேய், பிசாசு அண்டாதிருக்க, தனி வழி செல்லும் போது ஜபிக்கவும்

நமோ-வாகம் ப்ரூமோ நயன-ரணமியாய பதயே:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி ரஸாலக்தகவதே
அஸுயத்யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பசூனா-மீசான: ப்ரமதவன கங்கேலி-தரவே

(மருதாணியால் சிவந்த பாதங்களை உடைய பராசக்தி! மலட்டு அசோக மரமும் உன் பாதம் பட்டால் புஷ்பிக்கின்றது. உன் பட்டுப் பாதங்களை வருட பரமசிவன் ஆசைப்படுகிறார். அந்த பாதங்களால் பைசாசங்களை எட்டி உதைத்து என்னை ரட்சிப்பாயம்மா!)

4. பெண்களுக்கு விரைவில் விவாகம் நடக்க, மலட்டுத்தனம் நீங்க

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி: பஞ்ச பிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்குதிபி:
த்ரயஸ் சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-திரிவலய
த்ரிரேகாபீ: ஸார்தம் தவ சரண கோணா: பரிணதா

(ஒன்பது முக்கோணங்களால் ஆன ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருப்பவளே! சுற்றி எட்டிதழ் கமலம் பதினாறிதழ் கமலம், மூன்று வட்டங்கள், மூன்று கோடுகள், நாற்பத்து நான்கு கோணங்களை உடைய ஸ்ரீ சக்கரத்தை என்னால் வர்ணிக்க இயலுமோ? நீ நினைத்தால் ஆகாத காரியமும் உண்டோ?)

5. இளமை அங்கப் பூரிப்புக் குறைவாக-எடுப்பான தோற்றப் பொலிவின்றி இருக்கும் பெண்கள் பொலிவான தோற்றம் பெற, கர்ப்பிணிகள் அழகான குழந்தைகளைப் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-திடகடித-கூர்ப்பாஸபிது ரௌ
கஷந் தௌதோர்-மூலே கனக-கலசாபௌரகலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ

(பரமசிவனுடைய பெருமைகளை நினைத்த மாத்திரத்தில் விம்மிதமுற்று மார்க் கச்சையைக் கிழித்து விடுமோ என்று எண்ணும்படி பூரித்து விளங்கும் பொற்குடங்களைப் போன்ற தனங்களின் பாரத்தினால் உனது மெல்லிய இடை ஒடிந்துவிடக் கூடாதென்று தான் அதில் மூன்று மடிப்புகள் உள்ளனவோ? அம்மா காத்யாயிணி! அந்த சௌந்தர்யத்தில் ஒரு துளியை என்னிடம் செலுத்தும்படி பணிந்து கேட்கின்றேன்.)


இந்துக்கடவுள்கள்