அனலில் புனலில் வான்வெளியில்
மழையில் நனையும் புவியில்
நிலத்தில் முளைக்கும் தாவரத்தில்
நெடுமரத்தின் பூவின் மகரந்தத்தில்
சந்திர சூரிய ஒளியில்
வெயிலில் மலரரும் தாமரையில்
இதமாய் வீசும் மென்காற்றில்
எல்லைகள் இல்லா வானத்தில்
எல்லையில் தோன்றிடும் வானவில்லில்
அழகிய ஏழு வண்ணங்களில்
அதன் ஒற்றுமையில் தோன்றிடும் வெண்ணிறத்தில்
மின்னலின் இடியின் ஒலிஒளியில்
குறிஞ்சி மருதம் முல்லையில்
காணும் காட்சிகள் அனைத்தில்
காணா உலகம் அதனில்
உணரும் ஆறு அறிவில்
உணரா மெய்ப்பொருளில்
அழிக்கும் இயற்கை சீற்றத்தில்
என்னில் உன்னில் அஃதில்
கண்டேன் உணர்ந்தேன் பராசக்தியை!!!
*********
சக்தி_ஷரா